இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கடற்கொள்ளையராக சித்தரிக்கும் 40 கேலி சித்திரங்கள்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கடற்கொள்ளையராக சித்தரிக்கும் 40 வகையான கேலி சித்திரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.  தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்றதாக,  ஈரானின் சரக்கு கப்பலை  இங்கிலாந்து கடற்படை கைப்பற்றியது. இங்கிலாந்தின் இந்த செயலை சாடும் விதமாக டெஹ்ரானில் உள்ள கலாச்சார மையத்தில் நடத்தப்பட்டு வரும் கண்காட்சியில் இந்த கேலி சித்திரங்கள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளது.

Exit mobile version