4 வயது சிறுமி பாலியல் பாலாத்காரம் செய்து படுகொலை

திருவள்ளூர் மாவட்டத்தில் 4 வயது சிறுமி பாலியல் பாலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளவேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் செங்கல் சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அமீத் மற்றும் அவரது மனைவி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் 4 வயது சிறுமியை அமீத்தின் உறவினர்களான நிலக்கர், சந்தரவனம் ஆகியோர் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மாலை நீண்ட நேரம் ஆகியும் குழந்தை வராததால் சந்தேகம் அடைந்த அமீத், சிறுமியை அழைத்துச் சென்றவர்களிடம் விசாரிக்க சென்ற போது, இருவரும் மது போதையில் இருந்தனர். இந்நிலையில் முள்புதரில் முகத்தில் காயங்களுடன், பாலியல் பலாத்காரம் செய்த அறிகுறியோடு சிறுமி சடலமாக கிடந்துள்ளார். காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அமீத் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version