சென்னை மெரினாவில் 4 இருசக்கர வாகனம் தீயில் எரிந்து நாசம்

சென்னை மெரினாவில் 4 இருசக்கர வாகனம் தீயில் எரிந்து சேதமானதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரேணுகா என்பவர் சென்னை, நொச்சிக்குப்பம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை குடியிருப்பின் கீழ் நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். அந்த வாகனத்தின் அருகே மூன்று வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், திடீரென அந்த 4 வாகனங்களும் தீ பற்றி எரிந்துள்ளது. வெப்பத்தின் காரணமாக தீப்பற்றி எரிந்திருக்கலாம், என்றும், மர்ம நபர்கள் தீ வைத்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version