சொர்க்கவாசல் திறப்பு விழாற்கு திருப்பதி வெங்கடாஜலபதிக்கு 4 டன் பூமாலை தொடுக்கும் பணி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதிக்கு 4 டன் பூமாலை தொடுத்து அனுப்பும் பணியில் பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு டன் கணக்கில் பூமாலைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்தநிலையில் ராசிபுரத்தில் இருந்து 4 டன் மலர்களை மாலைகளாக தொடுத்து அனுப்பும் பணி நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட பெண்கள் மலர்களை மாலைகளாக கட்டினர். சாமந்தி, ரோஜா,மல்லிகை, துளசி, அரளி,மரிக்கொழுந்து, தாமரை,சம்பங்கி உள்ளிட்ட மலர்களை மாலைகளாக தொடுத்தனர்.

Exit mobile version