முதுமலை அருகே சாலையோரத்தில் உலா வந்த 4 புலிகள்

முதுமலை அருகே பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சாலையோரத்தில் உலா வந்த நான்கு புலிகளைசுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.

மலைகள் நிறைந்த மாவட்டமான நீலகிரியில், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகியவை தொடர் வனப்பகுதியாக உள்ளன. தற்போது இரு மாநில புலிகள் காப்பகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்படுகிறது. இந்நிலையில், பந்திப்பூர் – உதகை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதியில், நான்கு புலிகள் ஒய்யாரமாக நடந்து வந்த காட்சியை பார்த்த சுற்றுலா பயணிகள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். பொதுவாக ஒரு புலி அல்லது இரண்டு புலி என தனித்தனியாக பார்க்கும் நிலையில், ஒரே இடத்தில் நான்கு புலிகளை கண்ட சுற்றுலா பயணிகளின்கண்களுக்கு அது விருந்தாக அமைந்தது.

Exit mobile version