4 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு

4 உயர் நீதிமன்றங்களை சேர்ந்த தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனிடையே இந்த ஆண்டு இறுதியில் மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் ஓய்வுபெற இருக்கிறார்கள்.

இந்தநிலையில் மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹேமந்த் குப்தா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷ் ரெட்டி, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.ஷா, திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version