மக்களவைத் தேர்தலுடன் 4 மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறும்

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய நான்கு மாநில அரசுகளின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி மக்களவைத் தேர்தலுடனே அவற்றிற்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி சிக்கிமுக்கு மே 27 ஆம் தேதியன்றும், அருணாச்சல பிரதேசத்திற்கு ஜூன் 1 ஆம் தேதியன்றும், ஒடிசாவிற்கு ஜூன் 11 ஆம் தேதியன்றும், ஆந்திராவுக்கு ஜூன் 18 ஆம் தேதியன்றும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீருக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

Exit mobile version