புல்வாமாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தின் லாசிபோரா பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, அந்தப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதல் நிகழ்த்திய நிலையில், இருதரப்பினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. நீண்ட நேரம் நீடித்த சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Exit mobile version