ஆம்பூர் அருகே சிறுத்தை கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சிறுத்தை கடித்து 4 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஆம்பூர் அருகே உள்ள அபிகிரிபட்டறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நான்கு ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியுள்ளது. இதில் 4 ஆடுகளும் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Exit mobile version