ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கைது

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். மீன்பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள், கிங்ஸ்டன், இன்னாசி, நெல்சன், வில்லர் ஆகிய 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

Exit mobile version