வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்

வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வரும் ஜனவரி மாதம் 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். சிறப்பு முகாம் மூலம் வாக்காளர்கள், பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் ஆகியவைகளை செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். இப்பணிகள் முடிந்த பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அன்று வெளியிடப்படும் எனவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபட இருக்கும் ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்டன. இந்நிலையில், தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ளாத ஆசிரியர்களுக்கு, உரிய விளக்கம் கேட்டு தேர்தல் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Exit mobile version