தலைமை காவலரை கற்களால் தாக்கிய 4 பேர் கைது

தாம்பரம் அருகே தலைமை காவலரை கற்களால் தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்

சென்னை தாம்பரம் அடுத்த பழைய ஜி.எஸ்.டி சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு தலைமைக் காவலர் இளங்கோ என்பவர் சென்றிருந்தார். அப்போது தேவாலயம் அருகில் சிலர் மது அருந்துவதை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் தலைமை காவலர் இளங்கோவை கத்தியை காட்டி மிரட்டி கற்களால் தாக்கியது. ஒரு கட்டத்தில் கீழே விழுந்த இளங்கோவை பொது மக்கள் மீட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக பீர்க்கன்கரணையை சேர்ந்த பாஷா,புதுபெருங்களத்தூரை சேர்ந்த சாந்தாராம் கார்த்திகேயன் மற்றும் சிறார் ஒருவர் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

Exit mobile version