முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 3-ம் கட்ட சூறாவளி பிரசாரம்!

மூன்றாம் கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

கடந்த 24 ம் தேதி தனது 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். நேற்று மதுரை மாவட்டத்தில் பிரசாரம் செய்த முதலமைச்சர், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இந்நிலையில், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பிரசாரம் செய்யும் முதலமைச்சர், அமைச்சர்கள், கடம்பூர் ராஜு, கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். அதே போன்று, திருப்பத்தூர் வேட்பாளர் மருது அழகுராஜ், சிவகங்கை வேட்பாளர் செந்தில்நாதன், மானாமதுரை வேட்பாளர் நாகராஜன், அருப்புக்கோட்டை வேட்பாளர் வைகைச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்க உள்ளார்.

 

Exit mobile version