மே.தீவுகளுடனான 3வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் முக்கிய வீரர் விலகல்

மேற்கிந்திய தீவுகளுடனான  3வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணி வீரர் தீபக் சாஹர் விலகியுள்ளார்.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒருமுறை வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 22ம் தேதி கட்டாக்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் விலகியுள்ளார்.

2வது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதனால் 3வது ஒருநாள் போட்டியில் இருந்து தீபக் சாஹர் விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக அணியில் டெல்லியை சேர்ந்த தீபக் சைனி இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வரர் குமார் ஒருநாள் தொடரில் விலகினார். அவரை தொடர்ந்து தீபக் சாஹரும் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version