3வது ஒருநாள் போட்டி : இந்தியாவிற்கு 314 ரன்கள் இலக்கு

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடி 313 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் 3வது போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச், உஸ்மான் குவாஜா ஆகியோர் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டிற்கு 193 ரன்கள் சேர்த்தனர். உஸ்மான் குவாஜா சிறப்பாக விளையாடி சர்வதேச அரங்கில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இதனையடுத்து இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அணி 314 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Exit mobile version