தமிழகத்தில் 3வது நாளாக உயர்ந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து காணப்படுகிறது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 592 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி ஆயிரத்து 568ஆகவும், 4ம் தேதி ஆயிரத்து 575ஆகவும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை பதிவானது. கடந்த 24 மணிநேரத்தில் 18 பேர் நோய் தொற்றுக்கு உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 18ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில்,165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, கோவையில் 229 பேருக்கும், செங்கல்பட்டில் 127 பேருக்கும், ஈரோட்டில் 104 பேருக்கும் நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

Exit mobile version