சென்னையில் 3வது நாளாக அணிவகுப்பு ஒத்திகை

72வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் வரும் 15ம் தேதி கொண்டாப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் விழாவில்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்வார். இதற்காக காமராஜர் சாலையில்  3வது அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆயுதப்படை, சிறப்பு காவல் படை, கமான்டோ படை, குதிரைப்படை, தேசிய மாணவர் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவை சார்ந்த காவல் படையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Exit mobile version