தமிழகத்தில் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்!!

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 39 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை காவல் ஆணையராக பதவி வகித்து வந்த ஏ.கே.விஸ்வநாதன், பணியிடமாற்றம் செய்யப்பட்டு, தமிழக செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுனில்குமார், மனித உரிமை ஆணையத்திற்கும், ரவி, ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநில தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாகவும், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக ஜெயராமும் நியமிக்கப்பட்டுள்ளனர். அமல்ராஜ் சென்னை தலைமையக கூடுதல் கமிஷனராகவும், கணேஷமூர்த்தி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாகவும், தினகரன் சென்னை தெற்கு கூடுதல் கமிஷனராகவும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பிரேம் ஆனந்த் சின்ஹா மதுரை காவல் ஆணையராகவும், அருண் சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சஞ்சய்குமார் தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாகவும், லோகநாதன் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருச்சி போலீஸ் கமிஷனராகவும் பதவி ஏற்கிறார்கள். கார்த்திகேயன், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version