டெல்லியில் இன்று 38-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

டெல்லியில் இன்று நடைபெறும் 38-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழகம் சார்பில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொள்கிறார். மத்திய அரசின் வருவாய் சரிந்துள்ள நிலையில், அதனை ஈடுகட்டும் வகையில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.

Exit mobile version