துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.38 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில், துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட, 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சூடான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானநிலையத்தில், தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, துபாயில் இருந்து வந்த சூடானை சேர்ந்த அப்துல் கதிர் மொபூ என்ற பெண், 30 லட்சம் மதிப்புள்ள 7 தங்கக்கட்டிகளை அவர் மறைத்து எடுத்துவந்தது தெரியவந்தது. இதேபோல, துபாயில் இருந்து சென்னைக்கு வந்த கலந்தர் இர்பான் என்பவர், 8 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில், சூடானை சேர்ந்த அப்துல் கதிர் மொபூவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version