உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுக சார்பில் 38 குழுக்கள் அமைப்பு

 

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டித் தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்காக அதிமுக சார்பில் அமைப்பு முறையிலான 38 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், ஒன்றிய நகர, பேரூராட்சி பகுதிக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தேர்தல் பணிக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேபோல் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு நல்கித் தேர்தல் பணியாற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Exit mobile version