தமிழ் வளர்ச்சித் துறையில் 37 புதிய அறிவிப்புகள்

தமிழ் வளர்ச்சித்துறையில் 37 புதிய அறிவிப்புகளை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்டுள்ளார். வள்ளலார், காரைக்கால் அம்மையார், வீரமாமுனிவர் பெயர்களில் புதிய விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரில் சிற்றிதழ் பரிசு என்ற புதிய விருது ஆண்டுதோறும் வழங்கப்படும், சங்கப்புலவர்களுக்கு நினைவுத் தூண் அமைத்து ஆண்டுதோறும் மாலை அணிவித்து சிறப்பு செய்ய 41 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வீரமாமுனிவரின் பிறந்தநாள் தமிழ் அகராதியின் நாளாக கொண்டாடப்படும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 முதல் 27 வரை தமிழ் ஆட்சி மொழி சட்டம் வாரம் கொண்டாடப்படும், திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகளை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்டார்.

Exit mobile version