தமிழகம், புதுச்சேரியில் 36 எஸ்.பி.ஐ வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 36 எஸ்.பி.ஐ வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிகள் சென்னை, சேலம், மதுரை, திருச்சி, கோவை என ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், 5 வங்கிகள் இணைப்பின் போது, பல்வேறு கிளைகள் மூடப்பட்டன. தொடர்ந்து, பல்வேறு கிளைகளை மூடவும் திட்டமிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், சென்னையில் பாரிமுனை, முத்தியால்பேட்டை, ஜி.என்.செட்டி சாலை, தணிகாசலம் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட வங்கி கிளைகள் மூடப்பட்டன. மேலும், மதுரை, புதுச்சேரி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள கிளைகளையும் சேர்த்து, 36 கிளைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட கிளைகளின் வாடிக்கையாளர் கணக்குகள், அருகில் உள்ள கிளைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version