2,500 கோடி- 354 கிலோ-4 பேர்-ராஜபோதை கடத்தல் முயற்சி-காவல்துறை கைது

2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்களை கடத்திய நால்வரை டெல்லி காவல்துறை கையும் களவுமாக கைது செய்தது.

ஆப்கானிஸ்தானில் இருந்து மும்பை வழியாக, டெல்லிக்கு ஹெராயின் கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷிவ்புரிக்கு அருகே, தனியார் ஆலையில் பதப்படுத்தி வைத்து, பின்னர் அதனை பஞ்சாபில் விற்கும் திட்டத்துடன் கடத்தப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 354 கிலோ ஹெராயின் பறிமுதல்செய்யப்பட்ட நிலையில், மிகப்பெரிய சர்வதேச போதை மருந்து கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version