திருச்சி விமான நிலையத்தில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 352 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் சுமார் 11 லட்ச ரூபாய் மதிப்புள்ள 352 கிராம் தங்கத்தை நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது மதுரையை சேர்ந்த சரவணன் என்பவர் மறைத்து எடுத்து வந்த 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்ததுடன் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version