ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது வெடி குண்டு தாக்குதல்

ஃபரா மாகாணத்தில் உள்ள கண்டஹர் ஹெராட் நெடுஞ்சாலையில் பணிகள் பேருந்து சென்று கொண்டிருந்த போது, தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஈராக், சிரியா எல்லையில் தாலிபான்கள் ஆக்கிரமித்துள்ள அப்பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த பெண்கள் குழந்தைகள் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 95-க்கும் மேற்பட்டோர் காயடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலை தாலீபான்கள் நடத்தியதாக ஆளுநர் அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது. 

Exit mobile version