டேராடூனில் பயிற்சியை நிறைவு செய்த 347 அதிகாரிகள் ராணுவத்தின் இணைந்தனர்

டேராடூனில் பயிற்சி முடித்த 347 அதிகாரிகள் ராணுவத்தில் இணையும் நிகழ்ச்சி கம்பீரமாக நடைபெற்றது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் இந்தியாவை சேர்ந்த 347 அதிகாரிகளும், ஆப்கானிஸ்தான், பூட்டான், மாலத்தீவு, தஜிகிஸ்தான், நேப்பாள், இலங்கை, வியட்நாம் ஆகிய நாடுகளை சேர்ந்த 80 அதிகாரிகளும் பயிற்சி பெற்றனர்.

இவர்களின் பயிற்சி நிறைவு விழா டேராடூனில் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் மிடுக்காக அணிவகுத்தனர். தற்போது ராணுவத்தில் இணைந்திருக்கும் அதிகாரிகளில் 51 பேர் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version