அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்ற 311 இந்தியர்கள்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற 311 இந்தியர்களை மெக்சிகோ நாடு கடத்துகிறது.

கடந்த சில மாதங்களாக புரோக்கர்களின் உதவியுடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேற முயன்றதாக தகவல் வெளியானது. இதனையடுத்து மெக்சிகோ குடியுரிமை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த வகையில் 311 இந்தியர்கள் மெக்சிகோவில் சிக்கினர். இதனையடுத்து அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த முடிவு செய்யப்பட்டு, ஒரு வழி பயண அவசர கால அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளுடன் தனி விமானம் மூலம் இந்தியர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த விமானம் நாளை டெல்லிக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version