ஆம்பூர் அருகே சூறைக்காற்றுடன் கூடிய கன மழையால் 3000 வாழைகள் சேதம்

ஆம்பூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் பத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றியுள்ள பெரியாங்குப்பம், நாச்சார்குப்பம், ராமசெட்டிகுட்டை உள்ளிட்ட பகுதியில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதில், 10க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த 3000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. பருவ மழை பொழியாமல் நிலத்தடி நீர் வற்றி போயிருந்த நிலையில், விவசாயிகள் கடன் வாங்கி ஆழ்துளை கிணறு அமைத்து, பயிர் செய்திருந்தனர். தற்போது, அறுவடை செய்யும் நேரத்தில், சூறைகாற்றுடன் மழை பொழிந்து வாழை மரங்கள் சேதமாகியுள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Exit mobile version