30 ஆண்டுகளுக்கு பின் கண்மாய்கள் நிரம்பியதால் மக்கள் மகிழ்ச்சி

திருப்பத்தூரில் உள்ள கண்மாய்கள் 30 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியதால், விவசாயிகள், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள், குளங்கள், முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புணரமைக்கப்பட்டு, தூர்வாரும் பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, அரளிக்கோட்டை, கண்டவராயன்பட்டி, கீழச்சிவல்பட்டி, மாதவராயன்பட்டி உள்ளிட்ட ஏராளமான கண்மாய்களில், தூர்வாரும் பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில், தற்போது பருவமழை பெய்து வருவதால், கண்மாய்களில் நீர் நிரம்பி வருகின்றன. 30 ஆண்டுகளுக்கு பின் கண்மாய்கள் நிரம்பி உள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version