கண்ணை மறைத்த கள்ளக்காதல்… 3 வயது குழந்தை கொலை…

கோவை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

ஆனைமலை அருகே தம்மம்பதி பகுதியை சேர்ந்தவர் சரோஜினி. இவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், குழந்தைக்கு உடல் நிலை சரி இல்லை என ஊர் முழுக்க தண்டோரா போட்டு விட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் சதிலீலாவதி சரோஜினி.

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தாய் சரோஜினியிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக மருத்துவர்களுக்கு சந்தேகம் வர சரோஜினிக்கு தெரியாமல் போலீசுக்கு தகவல் சொல்லியுள்ளனர்.

எதுவுமே தெரியாதது போல் தாய் சரோஜினி, மருத்துவமனையே அதிரும் வகையில் அலறி அழுது கொண்டிருக்க, மருத்துவமனைக்கு வந்த போலீசார் அவரை தனியே ஆபிஸ் ரூமிற்கு அழைத்து சென்று தங்கள் பாணியில் விசாரித்தனர். இதையடுத்து சரஜோனி தனது கள்ளக்காதலன் சின்ன பொம்மன் என்பவரோடு சேர்ந்து 3 வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றது அம்பலமானது.

தன்னோடு சேர்ந்து வாழ குழந்தை இருக்க கூடாது என கள்ளக்காதலன் சின்ன பொம்மன் கூற தாய் சரோஜினி கொஞ்சம் கூட சஞ்சலம் இன்றி இந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளார். விஷயம் அறிந்து அதிர்ந்து போன காவலர்கள், சின்ன பொம்மன் மற்றும் சரோஜினியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 3 வயது குழந்தையின் மூச்சை நிறுத்தும் கள்ளக் காதல் சரோஜினியின் கண்ணை மறைத்துள்ளது.

Exit mobile version