கேரளாவில் இருந்து குமரிக்கு சுற்றுலா வந்த 3 பேர் உயிரிழப்பு

கேரளா மாநிலத்திலிருந்து குமரிக்கு வந்த 3 சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பகுதியில் வனத்துறையினர் சுற்றுலாவாசிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை. இதனிடையே பணிநாட்களில் மட்டும் மின்வாரிய அலுவலக அதிகாரிகள் மட்டும் பெரும்பாலும் இங்கு பயணிக்கின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி, அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்திருக்கிறது. இதனிடையே கேரள மாநிலத்திலிருந்து, கோதையாறு பகுதிக்கு அனுமதியில்லாமல் சுற்றுலா சென்ற 3 பேர், கோதையாற்றில் குளிக்கும்போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Exit mobile version