ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தொடர் ஊடுருவல் முயற்சிகளும் பாதுகாப்புப் படையினரின் முறியடிப்பும் தொடர்கதையாக உள்ள நிலையில், சோபியான் மாவட்டத்தின் கெல்லார் பகுதியில் நேற்றிரவு முதல் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வீட்டில் மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Exit mobile version