ஆண்டிப்பட்டியில் கேரள வாலிபரை மிரட்டி தங்க செயின்,மோதிரம்,பணம் பறித்த 3 பேர் கைது

ஆண்டிப்பட்டியில் கேரள வாலிபரை மிரட்டி தங்கசெயின், மோதிரம், செல்போன் மற்றும் பணத்தை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் மூணாரை சேர்ந்த அணித்குமார் என்பவர் சில தினங்களுக்கு முன் தேனியில் உள்ள நண்பரை பார்க்க ஆண்டிப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஹோட்டலில் உணவருந்தி கொண்டிருந்த போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரிடம் நைசாக பேசி அழைத்து சென்றுள்ளனர்.

ரயில்வே கேட் பகுதியில் உள்ள புதர் மறைவிற்கு அழைத்து சென்று மிரட்டி அவரிடமிருந்து மோதிரம், செல்போன் மற்றும் ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் இதே பகுதியை சேர்ந்த கார்த்திக்,மனோஆனந்த், மாரிமுத்து ஆகியோரை கைது செய்துள்ளனர்.

Exit mobile version