கொரோனா வைரஸால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்ததால், இந்தியாவில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மதியம் 2.30 மணி நிலவரப்படி 341ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் நேற்றிரவு மரணம் அடைந்தார். அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் இருந்ததாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பீகார் மாநிலம் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயது நபர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரசால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version