அசாமில் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் 3 பேர் உல்பா அமைப்பினரால் துப்பாக்கி முனையில் கடத்தல்

அசாமில் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் 3 பேரை உல்பா அமைப்பினர் துப்பாக்கி முனையில் கடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அசாமின் சிவசாகர் மாவட்டம் லக்வா பகுதியில் இந்த கடத்தல் சம்பவம் நடந்தேறியது. இன்று அதிகாலை 1 மணி அளவில் 2 பொறியாளர்கள் உள்ளிட்ட 3 பேரை உல்பா தீவிரவாதிகள் கடத்தி இருக்கின்றனர்.

பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான வாகனத்தில் அவர்களை கடத்தியுள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் அசாம் – நாகாலாந்து எல்லையில் நிமோனாகர் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தப்பட்ட ஊழியர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version