மேலும் 3பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி!- அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

உலகையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்நோய் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்நோயால் இந்தியாவில் தற்போது வரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று வரை 3 பேருக்கு கொரோனா தொற்று இருந்தநிலையில், இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “ மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மேலும் 3 பேருமே வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், 2 பேர் தாய்லாந்து நாட்டையும், ஒருவர் நியூசிலாந்து நாட்டையும் சேர்ந்தவர்” என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version