செஞ்சி அருகே கல்குட்டையில் மூழ்கி தாய் மகள் உட்பட 3 பேர் பலி

செஞ்சி அருகே கல்குட்டையில் மூழ்கி தாய் மகள் உட்பட 3 பேர் பலியாகினர்.

வடவானூர் அருகே நங்கிலிகொண்டான் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றில் உள்ள கல்குட்டையில் துணி துவைக்க பேகம் என்ற பெண் தனது மகள் பஸ்பின், ஜிமாலாபி என்ற 7வயது உறவுக்கார குழந்தையுடன் சென்றிருந்தார். பின்னர் அவர்கள் குட்டையில் தேங்கி இருந்த நீரில் குளித்தனர். எதிர்பாராத விதமாக மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version