3 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்த மாணவிகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலினால் உருக்குலைந்த மரங்களுக்கு மாற்றாக, 3 லட்சம் விதைப்பந்துகளை மாணவிகள் தயாரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கஜா புயலினால் எண்ணிலடங்கா மரங்கள் முற்றிலும் உருக்குலைந்தன. இந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் இணைந்து, 3 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்துள்ளனர். மொத்தம் 10 லட்சம் விதைப்பந்துகளை தயாரிக்க திட்டமிட்டுள்ள மாணவிகள், தற்போது வரை 3 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version