கடப்பாவில் போதைக்காக சானிடைசர் குடித்த 3 பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் நடைபெற்றதை போல் கடப்பாவிலும் போதைக்காக சானிடைசரை குடித்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குரிச்சேடில் போதைக்காக சானிடைசர் குடித்தவர்களில் 16 பேர் உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போன்றதொரு சம்பவம் கடப்பா மாவட்டத்தில் உள்ள பெண்ட்லிமரி கிராமத்தில் நடந்துள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த 10 பேர் நேற்று போதைக்காக சானிடைசரை குடித்துள்ளனர். அவர்களில் ஒபுலேஷ், பீமையா, சென்னகேசவலு ஆகியோர் நேற்று மாலை உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் வெளியே தெரிந்தால் தங்கள் ஊருக்கு போலீசார் வந்து பிடித்துச் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில் மரணமடைந்த மூன்று பேரின் உடல்களையும் கிராமத்தினர் ரகசியமாக தகனம் செய்து விட்டனர்.  இந்த விவகாரம் பற்றி அறிந்த காவல்துறையினர், சானிடைசர் குடித்த எஞ்சிய 7 பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனிடையே, கிராம மக்கள் போதைக்காக சானிடைசர் குடித்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

Exit mobile version