3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்தும், ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியும் தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள உத்தரவில், மதுரை மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த நாகராஜன், தொழில் முனைப்பு வளர்ச்சி நிறுவன இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட வருவாய் அதிகாரியாக இருக்கும் சாந்தகுமார், மாவட்ட ஆட்சியர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய பாலாஜி, பொதுப்பணித்துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மற்றொரு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய ராஜாராமன், நகர நிர்மாண இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

Exit mobile version