விழுப்புரத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரெட்டனை கிராமத்தைச் சேர்ந்த வினோத், சஞ்சய், சத்யா என்பதும், அப்பகுதியில் பல வீடுகளில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. வயல்வெளி பகுகளில் தனியாக உள்ள வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version