அதிமுக கொறடா அளித்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க 3 எம்.எல்.ஏ க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

அதிமுக கொறடா அளித்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ரத்தின சபாபதி, கலைச்செல்வன் மற்றும் பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்துள்ளார்.

அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி, விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அதிமுக கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் சபாநாயகர் தனபாலிடம் புகாரளித்தனர். இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் அமமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதையும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவததையும் ஆதாரங்களுடன் விளக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமென்று சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்துள்ளார்.

Exit mobile version