3 வது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற இரு அணிகளும் தீவிர வலை பயிற்சி

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முன்னிலை பெற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2 வது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

இதனால் இரு அணிகளும் தொடரில் சம நிலை வகிக்கின்றன. இந்நிலையில், 3 வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் தொடரில் முன்னிலை பெற முடியும் என்பதால் இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version