இன்று நடைபெறுகிறது இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் இடையேயான 2 வது டி-20 போட்டி

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் மோதும் 2 ஆவது டி 20 போட்டி அமெரிக்காவிலுள்ள பிளோரிடா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 3வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

Exit mobile version