2வது ஒருநாள் போட்டி: வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், 1-0 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு, இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர். முதல் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்து வீச்சே காரணம் என்று கூறப்படுகிறது. பேட்டிங்கில் மிரட்டும் மேற்கிந்திய தீவு வீரர்களை சமாளிக்க இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால், இன்றைய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருநாள் தொடரை இழக்காமல் இருக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

Exit mobile version