2வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரீல் முன்னிலை பெற்றது.

பே ஓவல் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று துவங்கியுள்ளது. இந்திய அணியில் கடந்த போட்டியில் இடம்பெற்ற வீரர்களே இந்த போட்டியிலும் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து அணியில் சட்னர், சௌதீ பதிலாக சோதி, கிராண்ட்ஹோம் சேரக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version