2-வது ஒருநாள் போட்டி: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது. ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, டோனி, ரி ஷப் பண்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். பந்து வீச்சிலும் முகமது சமி, குல்தீப் யாதவ், சஹால், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், கலீல் அகமது ஆகியோர் உள்ளனர்.

Exit mobile version