இங்கிலாந்து, மே.தீவுகள் மோதும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பாலோ ஆனை தவிர்த்த நிலையில், போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 2ம் நாள் முடிவில் 32 ரன்கள் எடுத்திருந்தது. 3ம் நாள் ஆட்டம், மழை குறுக்கீட்டால், ரத்தான நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அசுர வேக பந்துவீச்சால் திக்குமுக்காடிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாலோ ஆனை தவிர்த்தது.

Exit mobile version