2 ஜி மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றம்

நீதிபதி ஓ.பி.சைனி ஓய்வு பெற உள்ள நிலையில், 2 ஜி மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்குகள், நீதிபதி அஜய் குமார் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

2 ஜி மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சைனி விசாரித்து வருகிறார். இந்த மாத இறுதியில் சைனி ஓய்வு பெற உள்ளதால் இந்த வழக்குகளை நீதிபதி அஜய்குமார் அமர்வுக்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தொடர்பான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை அஜய்குமார் விசாரித்து வரும் நிலையில், 2 ஜி மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கையும் விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version